சட்டப்பேரவையில் சிரிப்பலை: பிரேமலதா விஜயகாந்த் – ஓ.பன்னீர்செல்வம் இடையே தண்ணீர் பாட்டில் விவாதம்!
காரசார அரசியல் விவாதங்களுக்கு நடுவே அரங்கேறிய நகைச்சுவை தருணம்; அவை உறுப்பினர்களும் சிரிப்பில் மூழ்கினர்! பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கை சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எம்.எல்.ஏ-க்களுக்கு டம்ளர்களில் தண்ணீர் வழங்குவதற்குப் பதிலாக, அவரவர் மேஜைகளில் தனித்தனி குடிநீர் பாட்டில்களை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பிளாஸ்டிக் பாட்டில்களுக்குத் தடை இருப்பதால், கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சட்டமன்ற ஊழியர்களின் வேலைப்பளு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஓ. பன்னீர்செல்வத்தின் நகைச்சுவை பதில் பிரேமலதாவின் இந்தக் கோரிக்கையைக் கேட்டவுடன் குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), "அண்ணியார் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார், ஆனால் அது ஏற்புடையதல்ல. ஏனெனில், அவையில் யாருக்காவது கோபம் வந்தால் தண்ணீர் பாட்டில்களை ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்து சண்டையிட வாய்ப்பு இருக்கிறது" என்று கிண்டலாகக் கூறினார். அவையில் எழுந்த சிரிப்பலை ஓபிஎஸ்-இன் இந்த எதிர்பாராத நகைச்சு...