ஈரானில் அடுத்தடுத்து பிரம்மாண்ட வெடிப்புகள்! அமெரிக்கா அதிரடி வான் தாக்குதல் – ஹோர்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம்!
பண்டார் அப்பாஸ், சிரிக், கெஷ்ம் தீவு உள்ளிட்ட முக்கிய ராணுவ மையங்கள் குறிவைத்து தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரம்! ஈரானில் அடுத்தடுத்து பிரம்மாண்ட வெடிப்புகள்! அமெரிக்கா அதிரடி வான் தாக்குதல் - ஹோர்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம்! ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பகை, இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள மிக முக்கிய ராணுவ மற்றும் பொருளாதா ர மையங்களைக் குறிவைத்து, அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை பாரிய வான் தாக்குதல்களை (Powerful Strikes) நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ஈரானின் முக்கியத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் கெஷ்ம் தீவு (Qeshm Island) ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பல இடங்களில் தீப்பற்றி எரிவதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் (Iranian state media) உறுதிப்படுத்தியுள்ளன. சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கிய மையமாகத் திகழும் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, உலக அளவில் கச்சா எண்ணெய்...