டெல்லியில் தடம் பதிக்கும் விஜய்: பிரதமர் மோடியுடன் இன்று முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு!
கோரிக்கைகளுடன் டெல்லி சென்ற முதல்வர் விஜய்! புதுடெல்லி: சினிமா திரையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்து, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறிய சி. ஜோசப் விஜய், இன்று தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் மிக முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வில், இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், டெல்லியின் சுட்டெரிக்கும் 45 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல், தனது வழக்கமான 'சிக்னேச்சர்' கருப்பு சூட் உடையில் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பொதுவாக மூத்த தலைவர்கள் டெல்லி செல்லும்போது அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெரும் பட்டாளமே உடன் செல்லும். ஆனால், எவ்வித ஆடம்பரமும் இன்றி, மிகக் குறைந்த அதிகாரிகளுடன் தனியாகப் பயணித்து ஒரு 'ஜென்-இசட்' (Gen-Z) தலைவருக்கான பாணியை விஜய்...